Tuesday, October 18, 2005
கல்வியை வியாபாரமாக்கலாமா?
கட்டுரை: ஆர்.பத்மலதா
நெல்லை சங்கீதசபாவில் நடைபெற்ற 20வது குஊஐ மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின், பொருளாதாரத்துறை பேராசிரியர் பிரபாத் பட் நாயக் கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையின் இரு முக்கியக் காரணிகளாக "உயர்கல்வியையும், உலகமயமாக்களையும்' குறிப்பிட்டார். இவரின் ஆங்கில உரையை தமிழில் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா மொழி பெயர்த்தார். ""இந்த சமூகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு அறிவு ஜீவிகள் கூட்டம் தேவை என்றார். ஏனெனில் சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த இவர்களால் தான் முடியும். இந்தியாவில் உயர்கல்விக்கு நிதி ஒதுக்குவது என்பது தேவையற்ற ஒன்றாக கருதப்படுகிறது. துவக்கக்கல்வி முன்னேற்றத்திலேயே அரசு ஆர்வம் காட்டுகிறது. ஆனால் இன்றைய விடுதலை பெற்ற இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார்''. நிறவெறி மிகுந்த தென்னாப்பிரிக்க நாட்டில் வெள்ளையர்களால் 2ம் தர குடிமக்களாக கருதப்படும் கருப்பர்களுக்கென்று ஒதுக்கப்படும் நிதியானது, இந்தியாவில் மக்களின் கல்விக்கென ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகமானது ஆகும் என்றார். உலகமயமாக்கல், உயர்கல்வியில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை விளக்க பிரதமர் மன்மோகன்சிங்கின் அமெரிக்க பயணத்தைக் குறிப்பிட்டார். பிரதமர் ஆலோசனைப்படி மேலை நாட்டு பல்கலை கழகங்களுடன் இணைந்து நமது உயர்கல்வி முறையை மேம்படுத்த நினைத்தோமானால் அது கல்வியில் 2ம் தரமென நம்மை நாமே தாழ்த்தி கொள்வது போலாகும். மேலும் மேலை நாட்டு பல்கலை கழகங்களில் பாடத்திட்டமானது இந்திய தலைவர்களின் வரலாற்றை மறைக்கும் ஒன்றாகவே அமையும் என்று கூறினார். விடுதலைப் போராட்ட காலத்தில் கல்வியானது, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட உதவும் ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் இன்று அது வியாபாரமாகிவிட்டது. கல்வியை இருமுறைகளில் பார்க்கலாம். 1) கல்வியை சரக்காகப் பார்ப்பது. 2) கல்வியை மக்களுக்கு நன்மை பயக்க கூடியதாய் பார்ப்பது. கல்விக்கு அரசு போதிய மானியம் வழங்காமல் அதை தனியார் மயமாக்கினால், கீழ்க்கண்ட பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். 1) அதிகம் பணம் கொடுத்து படிக்கும் மாணவர்கள், அதன் உள்ளடக்கத்தையே நிர்ணயிக்க முற்படுவர். 2) ஏற்கனவே பல ஏற்றத்தாழ்வு நிறைந்துள்ள நம் சமூகம், பணம் உள்ள மாணவர்கள், பணமில்லாதவர் என்ற இரு பிரிவினையை உண்டாக்கும். இறுதியில் பணம் கொடுக்க இயலாத மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினார். மேலும் தொடர்ந்து அவர் உரையில்: இந்திய அரசு முனைப்புடன், பணத்தை ஐஐகூ, ஐண்ஈஐஅண் ஐண்குகூஐகூக்கூஉ ஓஊ Mஅண்அஎஉMஉண்கூ யில் பயிலும் மாணவர்களுக்காக செலவிடுகிறது. ஆனால் இங்கு படிக்கும் மாணவர்களோ அமெரிக்கா போன்ற மேலை நாடுகளால் விரும்பப்படுகின்றனர். அவர்களும் அயல்நாட்டு வேலைக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இம்மாணவர்கள் படிப்பிற்கான செலவினை வரியாக செலுத்துபலவர்கள் இந்தியத் தொழிலாளர்கள் ஆவர். எனவே இந்திய மக்களின் வரியில் படித்துவிட்டு அயல்நாட்டில் கூலி வேலை பார்ப்பது தவறு என்றார் பட்நாயக். உயர்கல்விக்கு ஒதுக்க நிதி இல்லை என கூறும் மத்திய அரசும் ஆண்டு வருவாய் இழப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதனை மாநில அரசின் மீது சுமையாக மத்திய அரசு ஏற்றியது. ஒதுக்கீடுகளை குறைத்து மாநில அரசின் கடன் மீதான வரி உயர்த்தப்பட்டது. இதனால் மாநில அரசு கல்விக்கான ஒதுக்கீட்டை குறைக்கிறது. மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட மாநில அரசிற்கு கடனளிக்க பன்னாட்டு வங்கிகள் முன் வருகின்றன. இவை மீண்டும் காலனி ஆதிக்கத்திற்கே வழி வகுக்கும் என கூறினார். இறுதியாக அவர் கூறுகையில், விடுதலைக்கான போராட்டத்தில் நாம் நம்மை முழுமனதுடன் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டுமென்றார்.
நெல்லை சங்கீதசபாவில் நடைபெற்ற 20வது குஊஐ மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின், பொருளாதாரத்துறை பேராசிரியர் பிரபாத் பட் நாயக் கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையின் இரு முக்கியக் காரணிகளாக "உயர்கல்வியையும், உலகமயமாக்களையும்' குறிப்பிட்டார். இவரின் ஆங்கில உரையை தமிழில் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா மொழி பெயர்த்தார். ""இந்த சமூகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு அறிவு ஜீவிகள் கூட்டம் தேவை என்றார். ஏனெனில் சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த இவர்களால் தான் முடியும். இந்தியாவில் உயர்கல்விக்கு நிதி ஒதுக்குவது என்பது தேவையற்ற ஒன்றாக கருதப்படுகிறது. துவக்கக்கல்வி முன்னேற்றத்திலேயே அரசு ஆர்வம் காட்டுகிறது. ஆனால் இன்றைய விடுதலை பெற்ற இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார்''. நிறவெறி மிகுந்த தென்னாப்பிரிக்க நாட்டில் வெள்ளையர்களால் 2ம் தர குடிமக்களாக கருதப்படும் கருப்பர்களுக்கென்று ஒதுக்கப்படும் நிதியானது, இந்தியாவில் மக்களின் கல்விக்கென ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகமானது ஆகும் என்றார். உலகமயமாக்கல், உயர்கல்வியில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை விளக்க பிரதமர் மன்மோகன்சிங்கின் அமெரிக்க பயணத்தைக் குறிப்பிட்டார். பிரதமர் ஆலோசனைப்படி மேலை நாட்டு பல்கலை கழகங்களுடன் இணைந்து நமது உயர்கல்வி முறையை மேம்படுத்த நினைத்தோமானால் அது கல்வியில் 2ம் தரமென நம்மை நாமே தாழ்த்தி கொள்வது போலாகும். மேலும் மேலை நாட்டு பல்கலை கழகங்களில் பாடத்திட்டமானது இந்திய தலைவர்களின் வரலாற்றை மறைக்கும் ஒன்றாகவே அமையும் என்று கூறினார். விடுதலைப் போராட்ட காலத்தில் கல்வியானது, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட உதவும் ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் இன்று அது வியாபாரமாகிவிட்டது. கல்வியை இருமுறைகளில் பார்க்கலாம். 1) கல்வியை சரக்காகப் பார்ப்பது. 2) கல்வியை மக்களுக்கு நன்மை பயக்க கூடியதாய் பார்ப்பது. கல்விக்கு அரசு போதிய மானியம் வழங்காமல் அதை தனியார் மயமாக்கினால், கீழ்க்கண்ட பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். 1) அதிகம் பணம் கொடுத்து படிக்கும் மாணவர்கள், அதன் உள்ளடக்கத்தையே நிர்ணயிக்க முற்படுவர். 2) ஏற்கனவே பல ஏற்றத்தாழ்வு நிறைந்துள்ள நம் சமூகம், பணம் உள்ள மாணவர்கள், பணமில்லாதவர் என்ற இரு பிரிவினையை உண்டாக்கும். இறுதியில் பணம் கொடுக்க இயலாத மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினார். மேலும் தொடர்ந்து அவர் உரையில்: இந்திய அரசு முனைப்புடன், பணத்தை ஐஐகூ, ஐண்ஈஐஅண் ஐண்குகூஐகூக்கூஉ ஓஊ Mஅண்அஎஉMஉண்கூ யில் பயிலும் மாணவர்களுக்காக செலவிடுகிறது. ஆனால் இங்கு படிக்கும் மாணவர்களோ அமெரிக்கா போன்ற மேலை நாடுகளால் விரும்பப்படுகின்றனர். அவர்களும் அயல்நாட்டு வேலைக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இம்மாணவர்கள் படிப்பிற்கான செலவினை வரியாக செலுத்துபலவர்கள் இந்தியத் தொழிலாளர்கள் ஆவர். எனவே இந்திய மக்களின் வரியில் படித்துவிட்டு அயல்நாட்டில் கூலி வேலை பார்ப்பது தவறு என்றார் பட்நாயக். உயர்கல்விக்கு ஒதுக்க நிதி இல்லை என கூறும் மத்திய அரசும் ஆண்டு வருவாய் இழப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதனை மாநில அரசின் மீது சுமையாக மத்திய அரசு ஏற்றியது. ஒதுக்கீடுகளை குறைத்து மாநில அரசின் கடன் மீதான வரி உயர்த்தப்பட்டது. இதனால் மாநில அரசு கல்விக்கான ஒதுக்கீட்டை குறைக்கிறது. மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட மாநில அரசிற்கு கடனளிக்க பன்னாட்டு வங்கிகள் முன் வருகின்றன. இவை மீண்டும் காலனி ஆதிக்கத்திற்கே வழி வகுக்கும் என கூறினார். இறுதியாக அவர் கூறுகையில், விடுதலைக்கான போராட்டத்தில் நாம் நம்மை முழுமனதுடன் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டுமென்றார்.
Comments:
<< Home
கல்வி ஒரு
பணக்கார முதலாளியின்
பக்கத்தில் அமர்ந்துகொண்டு
எப்போதும்
ஏழை வீட்டை நோக்கியே
எச்சில் துப்புகிறது
இதயம் நெகிழ்வுடன்
- ரசிகவ் ஞானியார் -
Post a Comment
பணக்கார முதலாளியின்
பக்கத்தில் அமர்ந்துகொண்டு
எப்போதும்
ஏழை வீட்டை நோக்கியே
எச்சில் துப்புகிறது
இதயம் நெகிழ்வுடன்
- ரசிகவ் ஞானியார் -
<< Home