Tuesday, October 25, 2005

 

பரபரப்பு இதழியல் வெல்க என்று கொட்டு முரசே

கவர்ச்சியும் கிளுகிளுப்பும் மிக்க கடைசிப் பக்கங்களும் பரபரப்பான முதல் பக்கங்களும்
தென்னிந்தியாவில் ஊடகங்களை நடத்தி வரும் சன் குழுமம். அச்சு ஊடகத்தின் முதல் தினசரி வெளியீடாக தமிழ் முரசு மாலை நாளிதழை Tabloid வடிவில் வெளியிட்டுள்ளது. வாசகர்களை கவர்வதற்காக வண்ணமயத்துடன் 20 பக்கங்களுடன் முதல் நாள் 20,000 பிரதிகளும் பின் வரும் நாட்களில் 50,000 பிரதிகளும் விற்பனையாவதாக தெரிகிறது. பத்திரிகையை வாங்குபவர்களுக்கு இலவசப் பரிசுகளையும் வழங்கி வந்துள்ளது.தமிழ் முரசு மாலை நாளிதழ் வருகை அனைத்து தரப்பு மக்கள் மற்றும் செய்தித்தாள் நிறுவனங்களிடையே எதிர்பார்ப்பு காணப்பட்டது. செய்திகள் குறைவாக காணப்படுகிறது. நகரச் செய்தி தகவல்கள் குறைவாக உள்ளன. குற்றம் தொடர்பான செய்தி தகவல்கள் நெகிழ்வுரையாக வெளிவருகின்றன. சினிமா தொடர்புடைய செய்திகளும் அதற்கான புகைப்படங்களும் அதிக அளவில் உள்ளது.

ஓர் மாலை நாளிதழ் 20 பக்கத்துடன் வெளிவருவது புதிதாக இருந்தாலும் செய்திக்கு முக்கியத்துவம் தரப்படாமல் உள்ளது. நடிகை புகைப்படத்தை தவிர்த்து செய்திக்குரிய புகைப்படம் முதலியவற்றை மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.இதுவரை நாளிதழுடன் இலவச மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம். செய்தியின் தலைப்பு பெரியதாகவும் அதன் வடிவமைப்பு நன்றாகவும் உள்ளது. செய்தியின் தரம் கேள்வி குறியாக உள்ளது. பக்கங்கள் வண்ணமயமாக காணப்படுகிறது.ஓர் செய்திதாளின் விற்பனை அதிகரிக்க இலவச பரிசுகள் வழங்கினால் மட்டும் போதாது செய்தி அதிகமானதாக இருக்க வேண்டும் என நெல்லை ம.சு.பல்கலைக் கழக தொடர்பியல் துறைத் தலைவர் கோவிந்த ராஜு கூறினார். தமிழ் முரசு நாளிதழ் பற்றி தொடர்பியல் துறை பேராசிரியர் ரவீந்திரனிடம் கேட்ட போது. மேற்கத்திய நாடுகளில் வெளிவரும் செய்திதாள்களில் வேறுபட்ட பத்திரிகைகளுள் Tabloid வகையும் ஒன்றாகும்.இவ்வகை பத்திரிகை செய்தித் தாளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. Spreadsheet நாளேடுகள் தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கை. விருப்பு வெறுப்புகளில் தலையிடுவதில்லை. அதனை தவிர்த்து மக்கள் தொடர்புடைய செய்தி தகவலுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.Tabloid பத்திரிகைகள் தனி நபரின் வாழ்வு பொது வாழ்க்கையில் தொடர்புடையவர், அரச குடும்ப வாரிசுகள், கலைத்துறை சார்ந்த பிரபலங்கள், அரசியல் தொடர்புடைய பிரபலங்களின் செயல்பாடு பற்றி அறிய ஓர் குறிப்பிட்ட வாசகர்கள் உள்ளனர். அவர்களுக்கு பிரபலங்கள் பற்றிய தகவலை சேகரித்து எடுத்துச் செல்வதே Tabloid ஆகும். இயல்பாகவே மனித மனமானது பிறர் பற்றிய ரகசியத் தகவல்களை அறிய ஆர்வம் காட்டுகிறது.அவற்றை பூர்த்தி செய்வதற்கு வடிகாலாக பிரபலங்களின் தனிப்பட்ட தகவலை அறிய முடிகிறது. மனிதனின் இத்தகைய எண்ணமே Tabloid பெருகக் காரணம். இவற்றில் வெளிவரும் தகவல்கள் பரபரப்புடன் கூடியதாவும், பிரபலங்கள் சமூக வாழ்க்கையுடன் கொண்டிருக்கும் தொடர்பில் திருப்பத்தை ஏற்படுத்தும்படி இருக்கும்.இந்தியாவில் Tabloid முதலில் மும்பையில் BLITZ என்னும் பெயரிலும் MID DAY என்ற டில்லியில் பெயரிலும் வெளிவருகிறது. தமிழகத்தில் தற்போது வெளிவந்துள்ள தமிழ் முரசு இதழானது அதன் வடிவம் மட்டுமே Tabloid முறையில் வெளிவந்துள்ளது. அதன் உள்ளடக்கம் செய்திகள், தகவல்கள், புகைப்படங்கள் முதலியவை பல்வேறு இதழ்கள் வெளியிடும் கருத்து தகவலின் ஓர் தொகுப்பாக மட்டுமே இந்த இதழ் உள்ளது என்றார்.விற்பனை பிரதிகள் அதிகமாக விற்பனை ஆவதைப் பொறுத்து ஓர் நாளிதழின் வளர்ச்சியை குறிப்பிட முடியாது. எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்துள்ள தமிழ் முரசு நாளிதழ் எப்படி தொடர்ந்து ஒலிக்கப்போகிறது என்பதைக் கண்காணிக்க தமிழகம் காத்திருக்கிறது என்பதே நிஜம்.

கட்டுரை: எம்.மாரியப்பன்
படங்கள்: வி.வி.ஆர்.சுப்பிரமணியன்.

Tuesday, October 18, 2005

 

அனைவருக்கும் கல்வி அளிக்க அரசு தவறி விட்டது: வசந்திதேவி

உலகமயமாக்கலின் தீவிர வளர்ச்சியில் கல்வியின் நிலை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நெல்லை.ம.சு பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வசந்தி தேவி "உலக மயமாக்கலும் கல்வியும்'' என்ற தலைப்பில் சங்கீத சபாவில் உரையாற்றினார்.
""இந்த நாட்டில் கல்வி காப்பாற்றப்பட வேண்டுமானால் கல்வி மூலம் சமூகம் காப்பாற்றப்பட வேண்டும், அதற்கு மாணவர்கள் போராட வேண்டும். இதனை மாணவர் சங்கம் சிறப்புடன் செய்து வருகிறது. உலகமயமாதல் என்பது 90 களில் துவங்கி இன்று தீவிர வளர்ச்சி அடைந்துள்ளது. நாம் 21ம் நுõற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளில் இருக்கிறோம். உலகமயமாக்கலின் வளர்ச்சியை இப்போதாவது தடுத்து நிறுத்த வேண்டும். இது அறிவு உலகம். கல்வி பிரமாண்டமான உற்பத்தி சக்தியாக உள்ளது. இது குறிப்பிட்ட வர்க்கத்தினரின் கையில் சிக்கி இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. அடிமட்டத்து மக்களுக்கு கல்வி தான் விடுதலை அளிக்கும் கருவி, கல்வி அடிமைதனத்திலிருந்தும் ஏழ்மை நிலைமையிலிருந்தும் மக்களை மீட்க கூடியதாகவும் அமைய வேண்டும். சமூக கட்டமைப்பில் உள்ள சமுதாய ஏற்றத்தாழ்வுகளைப் போல கல்வியிலும் சமன் அற்ற நிலையைக் காண முடிகின்றது. இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதம் சமத்துவம். இன்றைய கல்விக் கொள்கை சமத்துவத்திலிருந்து விலகிச் செல்கிறது. நாட்டிலுள்ள அனைவருக்கும் சமமான கல்வியளிக்க இந்திய அரசு தவறிவிட்டது. அரசுப் பள்ளிகளிலும், கிராமப் பஞ்சாயத்து பள்ளிகளிலும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்குத்தான் கல்வி தரப்படுகிறது. பணக்கார வர்க்கத்தினருக்கு ஆங்கிலக் கல்வி என்ற நிலை இருக்கிறது. தமிழ் வழிக் கல்வி என்பது சமூகத்தில் கேவலமாகப் பார்க்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள் அடிப்படைவசதிகள் கூட இல்லாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. 1970க்குப் பின் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி மேலோங்கி இருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்திருத்தத்தில் அனைவருக்கும் சமமான கல்வி கேட்கின்ற உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கல்விக்கு கட்டணம் செலுத்திப் படிக்கும் படிப்பு இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. "வானமே எல்லை' என்பது இன்றைய இளைஞர்க்கு மட்டும் தான், வரலாறு காணாத கனவுகளை திறந்துவிடும் காலமிது. ஐ.ஐ.டி. அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் நடை பெறுகின்ற வளாக நேர்காணலின் மூலம் மாணவர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கொத்திச் சென்று விடுகின்றன. இது போன்ற வாய்ப்புகள் மிக சிலருக்குத் தான் கிடைக்கிறது. இந்நிறுவனங்கள் மீதான இளைஞர்களின் மோகம் வேதனை அளிக்கிறது. தமிழ் நாட்டின் தொழிற் கல்லுõரிகளில் உள்ள 80,000 இடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எத்தனை மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள் என்பதில் ஊடகங்கள் முறையான அக்கறை காட்டுவதில்லை. வசதிபடைத்தவர்கள் விருப்பத்திற்குத் தக்க அந்த பிரிவினருக்கு மட்டும் தான் தரமான கல்வி வழங்கப்படுன்ற நிலை உருவாகியுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு வேண்டாம். அவர்களின் பள்ளித் தேர்வு முடிவுகள் போதுமானது என்பது வரவேற்கத் தக்கது. கிராமம், நகரம் என்று பிரித்தால் மட்டும் போதாது. அவர்களில் ஏழை மாணவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவனின் பொருளாதார நிலையை அவனது பள்ளி அரசு பள்ளியா? தனியார் பள்ளியா? என்பதைப் பொறுத்து நிர்ணயித்து விடலாம். தமிழ் மீடியத்தில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தல் நியாயமானதாக இருக்கும். இந்திய சமூகத்தில் அனைவருக்கும் சமமான கல்வி அளிப்பது அரசின் கடமை என இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோத்தாரி கமிஷன் வலியுறுத்திய, அனைவருக்கும் பொதுக் கல்வி என்பது ஒரே மாதிரியான பாடத்தைத் திணிப்பது அல்ல. சமமான தரமான கல்வி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான். இதனை வலியுறுத்திப் போராடினால் கல்வி பொதுவுடைமை ஆகும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பொதுவான கல்வி முறை இருக்கிறது. வட்டார மொழிகளில் தான் கல்வி தரப்படுகின்றது. பொதுப் பள்ளிக்கல்விக் கொள்கைக்கான தீர்மானம் பாராளுமன்றத்தில், 1968, 1986, 1992ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டது. உலகமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கலின் நுழைவினால் இக் கொள்கை காற்றில் பறக்கவிடப்பட்டது. கல்விக்கான முழு பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய மொத்த உற்பத்தியில் 6% கல்விக்காகச் செலவிடப்பட வேண்டும் என்பது அரசின் குறிக்கோள், ஆனால் 4% நிதியைக் கூட இன்னும் ஒதுக்க முடியவில்லை. 10 ஆண்டுகளில் நுõறு ரூபாய்க்கு அறுபது பைசா செலவழித்தால் கூட அனைவருக்கும் சமமான கல்வியை அளித்திட முடியும். இது குறித்த கேள்விகளை மக்கள் எழுப்ப வேண்டும். நடைமுறையில் இருக்கின்ற சர்வசிக்சா அபியான் (அனைவருக்கும் கல்வி) முறை கூட கடன் வாங்கித்தான் நடத்தப்படுகிறது. முதல் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை முறையான திட்டம் தேவையில்லை. மாற்றுத்திட்டம் மட்டும் போதுமானது. 5ஆம் வகுப்பு வரை உள்ள கிராமப்புற பள்ளிகளில் இரு ஆசிரியர்கள் தான் இருக்கின்றனர். நலிவுற்ற மாணவர்களுக்கு ஏதோ ஒரு கல்வி கொடுத்தால் போதும் என்ற நிலை உள்ளது. உலகமயமாக்கலில் பொருளாதாரத்துறையில் ஏற்பட்ட தாக்கங்களால் வாழ்க்கை வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் சுருங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் நவீன காலக்கல்வி இரட்சகன், கோயில் என்று தகவல் தொழில்நுட்பத் துறையை கனவு காண்கின்றனர். ஆனால் இதன் மூலம் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. வேலையின்மையினால் படித்தவர்களுக்கும் வாழ்க்கை வாய்ப்பு குறைந்து வருகிறது. இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் போட்டி நிறைந்த உலகத்திற்கு குழந்தைகளும் தள்ளப்படுகிறார்கள். கல்வி என்பது முக்கோண வடிவில் உள்ளது. இதன் உச்சியை பிடிப்பது யார் என்ற போட்டி தீவிரம் அடைந்து வருகிறது. குழந்தைகள் நர்சரி பள்ளியிலிருந்தே நசுங்கிப் பிழியப்படுகிறார்கள். சக மாணவர்களை நண்பர்களாக பார்க்காமல் போட்டியாளர்களாகவே பார்க்கிறார்கள். கட்டுரை: அ.தேன்மொழி, மா.கலாவதி கட்டண அடிப்படையில் செயல்படுகிற கல்வி நிறுவனங்கள் அரசிடமிருந்து கட்டிடங்களை இலவசமாய் பெறுகின்ற போது ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்விக்கு 50% இடமும், கட்டண கல்விக்கு 50% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டுமென சட்டவரைவு கூறுகிறது. கல்வி பிரமாண்டமான ஒரு ஆயுதம். இது ஆதிக்க வர்க்கத்தின் கைகளில் சென்றுவிடாமல், மக்கள் கையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இந்திய சமத்துவம் மிக்க நாடாக வளரும். இதற்காக இந்திய மாணவர் சங்கம் பாடுபட வேண்டுமென மாநாட்டு சிறப்புரையில் கூறினார்.

 

கல்வியை வியாபாரமாக்கலாமா?

கட்டுரை: ஆர்.பத்மலதா

நெல்லை சங்கீதசபாவில் நடைபெற்ற 20வது குஊஐ மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின், பொருளாதாரத்துறை பேராசிரியர் பிரபாத் பட் நாயக் கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையின் இரு முக்கியக் காரணிகளாக "உயர்கல்வியையும், உலகமயமாக்களையும்' குறிப்பிட்டார். இவரின் ஆங்கில உரையை தமிழில் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா மொழி பெயர்த்தார். ""இந்த சமூகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு அறிவு ஜீவிகள் கூட்டம் தேவை என்றார். ஏனெனில் சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த இவர்களால் தான் முடியும். இந்தியாவில் உயர்கல்விக்கு நிதி ஒதுக்குவது என்பது தேவையற்ற ஒன்றாக கருதப்படுகிறது. துவக்கக்கல்வி முன்னேற்றத்திலேயே அரசு ஆர்வம் காட்டுகிறது. ஆனால் இன்றைய விடுதலை பெற்ற இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார்''. நிறவெறி மிகுந்த தென்னாப்பிரிக்க நாட்டில் வெள்ளையர்களால் 2ம் தர குடிமக்களாக கருதப்படும் கருப்பர்களுக்கென்று ஒதுக்கப்படும் நிதியானது, இந்தியாவில் மக்களின் கல்விக்கென ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகமானது ஆகும் என்றார். உலகமயமாக்கல், உயர்கல்வியில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை விளக்க பிரதமர் மன்மோகன்சிங்கின் அமெரிக்க பயணத்தைக் குறிப்பிட்டார். பிரதமர் ஆலோசனைப்படி மேலை நாட்டு பல்கலை கழகங்களுடன் இணைந்து நமது உயர்கல்வி முறையை மேம்படுத்த நினைத்தோமானால் அது கல்வியில் 2ம் தரமென நம்மை நாமே தாழ்த்தி கொள்வது போலாகும். மேலும் மேலை நாட்டு பல்கலை கழகங்களில் பாடத்திட்டமானது இந்திய தலைவர்களின் வரலாற்றை மறைக்கும் ஒன்றாகவே அமையும் என்று கூறினார். விடுதலைப் போராட்ட காலத்தில் கல்வியானது, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட உதவும் ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் இன்று அது வியாபாரமாகிவிட்டது. கல்வியை இருமுறைகளில் பார்க்கலாம். 1) கல்வியை சரக்காகப் பார்ப்பது. 2) கல்வியை மக்களுக்கு நன்மை பயக்க கூடியதாய் பார்ப்பது. கல்விக்கு அரசு போதிய மானியம் வழங்காமல் அதை தனியார் மயமாக்கினால், கீழ்க்கண்ட பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். 1) அதிகம் பணம் கொடுத்து படிக்கும் மாணவர்கள், அதன் உள்ளடக்கத்தையே நிர்ணயிக்க முற்படுவர். 2) ஏற்கனவே பல ஏற்றத்தாழ்வு நிறைந்துள்ள நம் சமூகம், பணம் உள்ள மாணவர்கள், பணமில்லாதவர் என்ற இரு பிரிவினையை உண்டாக்கும். இறுதியில் பணம் கொடுக்க இயலாத மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினார். மேலும் தொடர்ந்து அவர் உரையில்: இந்திய அரசு முனைப்புடன், பணத்தை ஐஐகூ, ஐண்ஈஐஅண் ஐண்குகூஐகூக்கூஉ ஓஊ Mஅண்அஎஉMஉண்கூ யில் பயிலும் மாணவர்களுக்காக செலவிடுகிறது. ஆனால் இங்கு படிக்கும் மாணவர்களோ அமெரிக்கா போன்ற மேலை நாடுகளால் விரும்பப்படுகின்றனர். அவர்களும் அயல்நாட்டு வேலைக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இம்மாணவர்கள் படிப்பிற்கான செலவினை வரியாக செலுத்துபலவர்கள் இந்தியத் தொழிலாளர்கள் ஆவர். எனவே இந்திய மக்களின் வரியில் படித்துவிட்டு அயல்நாட்டில் கூலி வேலை பார்ப்பது தவறு என்றார் பட்நாயக். உயர்கல்விக்கு ஒதுக்க நிதி இல்லை என கூறும் மத்திய அரசும் ஆண்டு வருவாய் இழப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதனை மாநில அரசின் மீது சுமையாக மத்திய அரசு ஏற்றியது. ஒதுக்கீடுகளை குறைத்து மாநில அரசின் கடன் மீதான வரி உயர்த்தப்பட்டது. இதனால் மாநில அரசு கல்விக்கான ஒதுக்கீட்டை குறைக்கிறது. மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட மாநில அரசிற்கு கடனளிக்க பன்னாட்டு வங்கிகள் முன் வருகின்றன. இவை மீண்டும் காலனி ஆதிக்கத்திற்கே வழி வகுக்கும் என கூறினார். இறுதியாக அவர் கூறுகையில், விடுதலைக்கான போராட்டத்தில் நாம் நம்மை முழுமனதுடன் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டுமென்றார்.

 

நகரங்களோடு கைகோர்க்கும் கிராமங்கள்

கட்டுரை: அ.இசைச்செல்வப்பெருமாள் அ.தேன்மொழி படங்கள்: பா.சேதுராமன்

கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அரசு கிராம வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் நகரங்களிலிருந்து துண்டுபட்ட கிராமங்களை இணைக்க மத்திய அரசால் "" பிரதம மந்திரி கிராம சாலை திட்டம்'' கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதி திட்டம் நெல்லை மாவட்டத்தின் திருப்பணி கரிசல் குளம் என்ற கிராமத்தை பிரதான சாலைகளுடன் இணைத்து வரவேற்பை பெற்றிருக்கிறது. இரண்டாயிரமாவது ஆண்டில் மத்திய அரசின் கிராம சாலை திட்டம் துவங்கப்பட்டது. 2000 2007 வரையிலான 7 ஆண்டுகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களையும் நகரங்களோடு இணைக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். கிராமங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனை, சந்தை போன்றவற்றிக்காக நகரங்களைச் சார்ந்திருக்கின்றன. விளைவிக்கப்பட்ட காய்கறிகள், மூலிகைகள் மற்றும் உணவு தானியங்களை விற்க நகரச் சந்தைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் கிராமங்கள் உள்ளன. கிராமங்களை நகரத்துடன் இணைக்கும் "" பிரமத மந்திரி கிராம சாலை திட்டத்தை'' மத்திய அரசின் மத்திய கிராம சாலை மேம்பாட்டு அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் முழுவதுமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமையினால் கடந்த 20032004ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டு வந்தது. 20042005யிலிருந்து இத்திட்டம் நெடுஞ்சாலை துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது, அத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாயிரமாவது ஆண்டில் துவங்கப்பட்ட இத்திட்டம் நான்கு பகுதிகளைக் கடந்து 5வது பகுதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் பகுதியில் திருநெல்வேலியில் ( 20002001 ) நாற்பத்தி ஒரு சாலைகள் 71.893 கிலோ மீட்டர் துõரத்திற்கு ரூ. 590.590 கோடி செலவில் போடப்பட்டன. இரண்டாம் பகுதியில் ( 2001 2002 ) இருபது சாலைகள் 38.480 கிலோ மீட்டர் தொலைவில் ரூ. 387.685 கோடி செலவில் போடப்பட்டன. இரண்டாம் பகுதி சாலைகளைத் தேர்ந்தெடுப்பதில் மத்திய கிராம சாலை மேம்பாட்டு அமைப்பு, சில புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்தது. அதன் பின் மக்கள் தொகை 500க்கு மேற்பட்ட கிராமங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மூன்றாவது பகுதியில் ( 2003 2004 ) 68 சாலைகள் 130.855 கிலோ மீட்டர் துõரத்திற்கு ரூ. 1456.290 கோடிகள் செலவில் போடப்பட்டன. இவை அனைத்தும் திருநெல்வேலியின் குக்கிராமங்களின் 238 வாழிடங்களை இணைக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் போடப்பட்ட கிராம சாலைகளின் தரத்தை நிர்ணயம் செய்ய மூன்றடுக்கு மேற்பார்வை குழுக்கள் இயங்கி வருகின்றன. ( முதல் குழு ) ஊரக வளர்ச்சி முகமையின் தலைமைப் பொறியாளர், துணைப் பொறியாளர், சிறப்புப் பொறியாளர் ஆகியோர் கொண்ட குழு முதலில் பார்வையிடுகிறது. அதன் பின் பிற மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் குழு சாலையின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. சாலைப்பணி முழுவதுமாக முடிவுற்ற பின் தேசிய அளவிலான பிற மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள் குழு டெல்லி தேசிய ஊரக சாலை மேம்பாட்டு அமைப்பால் அனுப்பி வைக்கப்படுகிறது. தேசிய குழுவினால் ""திருப்தி'' என சான்று அளிக்கப்பட்ட பின் முழுவதுமாக நிறைவு பெற்ற சாலை ஆகிறது. இதுவே தார்ச்சாலைகளின் உயர்வான தரத்திற்கு காரணம் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் துணை முதன்மை பொறியாளர் செல்வராஜ் கூறுகிறார். நெல்லையின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட திருப்பணி கரிசல் குளம் விவசாயத்தை நம்பி வாழும் கிராமம். 2004 2005ம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் சேரன்மகாதேவி பிரதான சாலையில் கொண்டநகரத்துடனும் தென்காசி பிரதான சாலையில் அபிஷேகப்பட்டியுடனும், இணைக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சாலையின் பயன்பாடு குறித்து இக்கிராமத்தை சேர்ந்த பெட்டிக் கடைக்காரர் சுப்பிரமணியனிடம் கேட்டேன்: "" இந்த சாலை எங்கள் ஊர் குளக்கரைக்கு அருகில் வயல்களின் ஓரத்தில் போடப்பட்டுள்ளது. குளத்துபாசனத்தினால் சாலையை அடுத்துள்ள 600 ஏக்கர் நிலங்கள் விளைக்கின்றன. இதில் கார் பருவத்தில் நெற்பயிரும், கோடை பருவத்தில் பருத்தி, வெண்டை, முருங்கை, சோளம் போன்றவற்றை விளைவிக்கிறோம். விளைந்த பொருட்களை ஒற்றையடிப் பாதை வழியாகத் தான் தலைச் சுமையாக கொண்டு வந்தோம். மழை காலத்தில் குளத்து தண்ணீரின் கசிவினால் சக்தி ஏற்பட்டு வயலுக்கு செல்ல வழியின்றி கஷ்டப்பட்டு கொண்டிந்தோம். முட்களும், புதர்களும் நிறைந்து கிடந்த ஒற்றையடி பாதையில் இரவு நேரம் பாம்புகளுக்கு பயந்து நீர் பாய்ச்ச செல்ல பயந்து கொண்டிருந்தோம். போக வர வசதியில்லாததால் என் மனைவி வயலை விற்கச் சொல்லி விட்டாள். இந்த சாலை வந்த பின் பறித்த காய்கறிகளையும், அறுவடை செய்த நெல் மூட்டைகளையும் வயல் அருகிலேயே பைக், ஆட்டோ மற்றும் வேன்களை நிறுத்தி சந்தைக்கு ஏற்றி செல்கிறோம். பறித்தவுடன் சீக்கிரமாக சந்தைக்கு கொண்டு செல்வதால் காய்கறிகள் வாடாமல் இருக்கின்றன. இந்தச் சாலையில் நகரப்பேரூந்து வசதியிருந்தால் பொருட்கள் மற்றும் ஆட்களை ஏற்றி செல்வது எளிதாக இருக்கும் ''.

 

28 ஆண்டுகளாகத் தொடரும் சூர்யா திரைப்பட விழா

திருவனந்தபுரத்திலிருந்து பா. வினோத், மா. கலாவதி படங்கள் வி.வி.ஆர். சுப்பிரமணியன்

ருபத்தி எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் சூர்யா திரைப்பட விழா இந்த வருடம் செப்டம்பர் 21ம் தேதி திருவனந்தபுரத்தில் துவங்கியது. கலாபவன் திரையரங்கில் இவ்விழாவை நடிகர் மோகன்லால் தொடங்கி வைத்தார். இவ்விழா திரைப்படம் மட்டுமின்றி பாட்டு, இசை, நடனம், நடிப்பு என 75 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சில படங்கள் பற்றிய விமர்சனங்கள்... மனித மனம், மனித உணர்வுகள் சம்பந்தப்பட்ட படம் சஞ்சாரம். விஜிபுல்லாப் பள்ளி இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படம். சிறு வயது முதலே ஒன்றாக வளரும் தோழிகள். இவர்களுக்கிடையே ஏற்படும் பாலுணர்வு சம்பந்தப்பட்ட உறவினை ஏற்றுக் கொள்ளாத சமூகம். இதனால் மனதளவில் அவர்கள் பாதிப்பிற்குள்ளாகுவதை பற்றிய திரைக்கதை. இயக்குநர் "குக்கூ' இயக்கத்தில் வெளியான "ஒராள்' மலையாள திரைப்படத்தில் நடிகர் முகேஷ் கதையில் ஒரு இயக்குநராக நடித்துள்ளார். திரைக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக நினைத்து மனநோயாளியாக மாறும் திரைக்கதை. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டாலும் சிறந்த முறையில் எடுக்கப்பட்டது. கண்ணே மடங்கு என்ற மலையாள திரைப்படம் உண்மை சம்பவம் மட்டுமின்றி இயக்குநர் ஆல்பர்டின் முதல் திரைப்படம். இத்திரைப்படம் 15 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ஏழ்மை குடும்பத்தில் பிறந்த நாயகி, குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. தந்தையின் மருத்துவ செலவிற்காகவும், தங்கையின் படிப்பிற்காகவும் வேலைக்குச் செல்கிறாள். அங்கு அவளுக்கு நேரும் கொடுமைகளைப் பற்றிய திரைக்கதை. திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரதிபலிப்பதாக அமையும். கண்ணே மடங்குக என்ற கதைவரியிலும் இயக்குநர் ஆல்பர்டின் படைப்பு தன்னிறைவு பெறுகிறது. ஜெயராஜ் இயக்கத்தில் உருவான தைவ நாமத்தில் என்ற மலையாளத்திரைப்படம். இஸ்ஸாமிய தீவிரவாத இளைஞனின் கதை. மதம் தீவிரவாதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இஸ்லாம் என்பதற்கு சமாதானம் என்பது பொருள் என மிகவும் எளிமையான முறையில் உணர்த்தியுள்ளார். ஜெயராஜ் இயக்கத்தில் உருவான மற்றொரு படைப்பு "மகள்க்கு' மனநிலை பாதிக்கப்பட்ட தாயின் வயிற்றில் பிறந்த குழந்தை தாயோடு மனநிலை சிகிச்சை முகாமில் சேர்க்கப்படுகிறது. குழந்தையின் வரவால் மனநிலை இழந்தவர்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் திரைக்கதை. லால்ஜி இயக்கத்தில் உருவான சிதறியவர் எனும் மலையாளத்திரைப்படம். பிற்படுத்தப்பட்ட இளைஞனைப்பற்றிய திரைக்கதை. வேலை தேடிச் செல்லும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை விரும்பாத அவன் இறுதியில் விருப்பமில்லாத தன் தந்தையின் தொழிலுக்கு செல்ல நேரிடுகிறது. இந்திரா காந்தி மறைவிற்கு பின் எழுந்த சீக்கியர்களின் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். சோனாலி போஸ் சுழூ சசிகுமாரின் "காயாதரன்' பிகா குமாரின் காமோஸ் பானி போன்ற இந்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இத்திரைப்படங்கள் சீக்கியர் படுகொலை நிகழ்வை வெவ்வெறு கோணங்களில் தங்கள் கதைக்காக எடுத்துக் கொண்டாலும் எந்த நிகழ்வு ஏற்படுத்திய பாதிப்பை விளக்கும் படமாக அமைந்திருந்தது. வரலாற்றை மையமாக வைத்து போஸ், எலிசபெத் படங்கள் திரையிடப்பட்டன. சியாம் பெனகல் இயக்கிய போஸ் இந்தி படமான சுபாஷ் சந்திரபோஸ் ஒரு மறக்கப்பட்ட கதாநாயகனாக சித்தரிக்கிறார். பிரதீப் நாயர் இயக்கியுள்ள "ஓரிடம்' குடும்பச் சூழ்நிலையில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண் அதிலிருந்து எவ்வாறு விடுபடுகிறாள் என்பது தான் திரைக்கதை. 8 விருதுகள் பெற்றிருந்தாலும், வணிக ரீதியில் வெற்றி பெற வில்லை. திரைக்கதையை தைரியமாக இயக்கிய பிரதீப் நாயர் பாராட்டப்படக்கூடிய இயக்குநர். சஞ்சய் லீலா பன்சாலியின் இந்தி திரைப்படமான பிளாக் கண் தெரியாத, காது கேட்காத, வாய் சரிவர பேச இயலாத குழந்தைக்கு பயிற்சி அளிக்கிறார். அமிதாப் அந்த குழந்தைக்காகவே வாழ்நாளை செலவழிக்கிறார். குழந்தை வளர்ந்து பட்டம் பெறும் சமயம் முதுமையால் பாதிக்கப்பட்டு தனது நினைவுகளை இழந்து தவிக்கிறார். நிறைவு நோக்கி படம் நகரும் போது அந்த குழந்தை அவருக்கு பயிற்சி உள்ளது. இது போன்ற குழந்தைகளுக்கு சொல்லித் தருகின்ற போது, வருகின்ற சிக்கல்கள் அவர்களது மனநிலை அவர்களுக்கு ஏற்படும் காதல். அவர்கள் இந்த உலகை விரல்களால் உணரும் உணர்வை சித்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. பேஜ் 3 என்ற இந்திப்படம் பதுர் பந்தார்கா இயக்கியுள்ளார். மேல்தட்டு மக்களாக தங்களை கருதி கொள்ளும் பணக்கார வர்க்கத்தின் மறுமுகத்தை காட்டும் படமாக அமைந்துள்ளது. பத்திரிகை உலகின் நிலையும், பெண் பத்திரிகையாளர் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் இயக்குநர் எடுத்துரைத்த விதம் சிறப்பாக உள்ளது. ஆண் பாலியல் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவணத்திரைப்படம். படம் தயாரித்த குழுவின் ஆய்வின் படி திருவனந்தபுரத்தில் 500க்கு மேற்பட்ட ஆண் பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று பதிவு செய்திருக்கிறார்கள். இப்படம் இவர்களது வாழ்க்கை முறையும், சோகங்களையும் எடுத்து இயம்பும் படமாக இருந்தது. இதன் இயக்குனர் சைனி ஜேக்கப் பெஞ்சமின். டெவில் ஒர்ஷிப்பர்ஸ் சாத்தானை வழிபடுபவர்களை பற்றிய ஆவணப்படம். திருவனந்தபுரத்தில் சாத்தானை வழிபடுபவர்கள் இருக்கிறார்கள் என்று இந்த ஆவணப்படம் கூறுகிறது. கே.பி. ஷிம்னா இயக்கிய "தி செல்ஸ்' விவாகரத்து தேவையா இல்லையா என்று விவாதம் செய்யும் படமாக உள்ளது. இளம் ஆவண பட இயக்குநர் என்றே கூறலாம். மும்பை இன்டர்நேஷனல் திரைப்படவிழாவில் இவர் இயக்கிய "சர்வைவர்' விருதுகளை பெற்றுள்ளது.

இவ்விழா குறித்து இயக்குனர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி அளித்த செவ்வி: கேள்வி: இந்த வருடம் சூர்யா திரைப்பட விழா 75 நாட்கள் தொடர என்ன காரணம்? பதில்: ஆசியாவிலேயே சூர்யா திரைப்பட விழா முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மலையாளத்தில் உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் 51. அதன் அடிப்படையில் ஆரம்பகால சூர்யா திரைப்பட விழா 51 நாட்கள் மட்டும் நடத்த வந்தோம். தற்போது கிழக்கு மேற்கு நாடுகளின் திரைப்படங்களும் இடம் பெறுவதால் 75 நாட்கள் தொடரலாம் எனத் தீர்மானித்தோம். கேள்வி: சூர்யாவின் முக்கியச் சாதனை எனக் கருதுவது? பதில்: சூர்யா ஆரம்பிக்கும் போது திருவனந்தபுரத்தில் 3 நாட்டிய கலைக்கூடம் மட்டுமே இருந்தது. தற்போது 100 நாட்டியக் கலைக்கூடம் உருவாகியுள்ளது. நாட்டியம் மட்டுமின்றி திரைப்படம், இசை ஆகியவற்றிலும் மக்களின் ரசிக்கும் திறன் மேன்மையடைந்துள்ளது. கேள்வி: இம்முறை சூர்யாவின் சிறப்பம்சம் என்ன? பதில்: சிறப்பம்சம் பற்றிக் கூறுமுன் இம்முறை ஒரு குறைபாடு ஏற்பட்டுள்ளது. தாகூர் திரையரங்கம் கிடைக்காததால் கலாபவன் திரையரங்கில் இவ்விழா நடைபெறுகிறது. இதனால் 1500 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி குறைந்து வெறும் 500 பேர் மட்டுமே காணமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறப்பம்சமாக குருபூஜை நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு மும்பை எஸ்.கமல் என்பவருக்கு குருபூஜை நடத்தப்பட்டது. அதிலிருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டு அவரின் மகளின் அறுவை சிகிச்சைக்கும், அவரின் திருமணத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு குருபூஜை அனந்த லக்ஷ்மி வெங்கட்ராமன் என்பவருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. கேள்வி: தற்போது சூர்யாவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? பதில்: சூர்யா துவங்கப்பட்டு 28 வருடம் ஆகிறது. மொத்தம் 16 நாடுகளில் சாப்டர்கள் (கிளைகள்) உள்ளது. மொத்த உறுப்பினர்கள் 30 ஆயிரம் பேர். கேரளத்தில் மட்டும் 7 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர் என்றார் அவர்.

 

""குஷ்புவின் கருத்தை வரவேற்கிறோம்..''

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் ஏனைய பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முன்னணி வகித்துக் கொண்டிருக்கும் ஒன்றாக குஷ்புவின் இந்தியா டூடே கட்டுரை பேட்டி அமைந்து விட்டது. ""பெண்கள் திருமணமாகும் போது, கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலை பெற வேண்டும்''. குஷ்புவின் மேற்கூறிய கூற்று, அவருக்காக கோயில் கட்டிய ரசிகர்களையே அவரது கொடும்பாவியையும் எரிக்க வைத்து விட்டது. தமிழக கலாச்சாரத்தை இழிவு படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டிற்காக குஷ்பு மன்னிப்பு கோரிய பின்பும் கூட அவர் மீதான கோபம் தமிழர்களுக்கு இன்னும் தனியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது, தமிழகத்தை விட்ட வெளியேறச் சொல்வது, ஆர்ப்பாட்டம் செய்வது என போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த சமூகம் இன்று எவ்வாறு உள்ளது! உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற பல மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டுள்ளது. பண்டைய கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டு வருகிறது. பெண்கள் சுயமாக சம்பாதிப்பது, திருமணத்திற்கு முன்பே இணைந்து வாழ்வது, விவாகரத்து செய்வது போன்ற மேலை நாட்டு தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் குஷ்புவின் கருத்தை எதிர்ப்பதன் மூலம் சமூகத்தினது ஆணாதிக்க மனப்பான்மை மேலெழும்புகிறது. ஊடகம், அரசியல் போன்ற பல பிரிவினரால் குஷ்பு விவகாரம் பந்தாடப்பட்டாலும், பொது மக்கள் இது குறித்து என்ன கருத்து கூறுகிறார்கள் என ஆராய்ந்த போது கீழ்க்கண்ட விபரங்கள் பெறப்பட்டன.

அ.ராமசாமி: (பேராசிரியர் தமிழ்த்துறை)
குஷ்புவின் இக்கருத்தானது ஆர்ப்பாட்டத்திற்குரியது அல்லது. நவீன தமிழ்சமூகத்தின் மாற்றத்தை உள்வாங்கி அவரால் கூறப்பட்டுள்ளது. இது மிகச்சரியான கருத்து ஆகும். இன்றைய நகரத்து, படித்த பெண்கள் கட்டுப்பாட்டு தளத்திலிருந்து மாறி வருகின்றனர். குஷ்புவின் கூற்று இன்று அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. அவரின் கருத்து மீதன்றி வேறு விஷயமாக போராடப்பட்டு வருகிறது. இதே கருத்தை ஒரு நடிகர் கூறியிருந்தால் இந்த அளவு பாதிப்பு இருக்காது. தமிழர்களுக்கு குஷ்புவின் உடல் தேவைப்படுகிறது. ஆனால் அவரின் அறிவு, கருத்து ஏற்க முடியவில்லை. கருத்து கூறியவர் ஊரை விட்டு போக வேண்டுமெனக் கூறுவது, தமிழர்களுக்கு மட்டும்தான் தமிழ்நாடு எனக்கூறுவது போல் உள்ளது. குஷ்புவின் மீது வெளிமாநிலத்தவர் என்ற முத்திரை குத்தப்படுகிறது. குஷ்பு விவகாரத்தில் குறிப்பிட்ட சில சேனல்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இச்செய்தியின் பரபரப்பு அடங்காமல் தொடரச் செய்கின்றது. சில அரசியல் கட்சிகள் மக்களின் உணர்வை துõண்டி தங்கள் அரசியல் எல்லையை விரிவு படுத்தப்பார்க்கின்றன என்றார்.

மேலும் குஷ்பு கூறிய கருத்தினை பற்றி கல்லுõரி மாணவர்களிடையே கேட்ட போது:

பென்சிகர் (2ம் ஆண்டு மின்னணு ஊடகவியல் துறை மாணவர்)

வாழ்க்கை என்பது ஒரு தடவைதான். அதை வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். திருமணத்திற்கு முன்பு ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையை எப்படி வாழ்ந்திருந்தாலும் பரவாயில்லை. பெண்களுக்கு தங்கள் வீட்டிலோ அல்லது திருமணம் ஆன பின் கணவன் வீட்டிலோ வேலி என்று ஒன்று போட்டு அவர்களை கட்டுப்படுத்த முடியாது. தனி மனித சுதந்திரம் என்பது பெரிதும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே திருமணத்திற்கு முன்பான அவர்களின் வாழ்க்கை எனது கவனத்திற்கு தேவையற்ற ஒன்றாகும் என்றார். வினோத்: (2ம் ஆண்டு தொடர்பியல் துறை) பெண்கள் தங்கள் பெற்றோர்களின் கட்டுப்பாட்டிலான வாழ்வு எவ்வாறு அமைந்தது என ஆராய்வது தேவையற்ற ஒன்று. திருமணத்திற்கு முன்பான வாழ்க்கை அவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை பொறுத்தது. திருமணமான பின்பு அமையும் அமைதியான வாழ்க்கையே எனக்கு தேவை என்றார்.

வி.வி.ஆர்.சுப்பிரமணியன்: (2ம் ஆண்டு மின்னணு ஊடகவியல் துறை)

திருமணத்திற்கு முன்பு எனது பார்வையில் குடும்பப்பாங்கான, கட்டுபாட்டிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பூ வைத்தல், சேலை அணிதல் போன்றவையே அவர்களின் அடையாளச் சின்னமாக இருக்க வேண்டும். நவீன மாற்றங்களான ஜீன்ஸ், டிசர்ட்ஸ் ஆடை கலாச்சாரம் போன்றவற்றை என்னால் ஏற்க முடியாது. குஷ்புவின் கருத்து என்னைப் பொறுத்தவரை மறுப்பிற்குரிய ஒன்று. அருண்குமார்: (தொடர்பியல் துறை விரிவுரையாளர்) குஷ்பு விவகாரத்தில் பேச்சுரிமை என்பது அனைவருக்கும் உண்டு. ஆனால் அதை எங்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். பிரபலமான ஒருவர் கருத்து கூறும் போது அனைவராலும் கவனிக்கப்படக்கூடிய ஒன்று. நாம் எந்த நிலையில் இந்த கருத்தை கூறுகிறோம் என்பதை அந்த நாட்டின் கலாச்சார பண்பாட்டை புரிந்து கொண்டு தமது கருத்தை வெளியிட வேண்டும். நாம் கூறும் சொந்த கருத்து மக்களிடையே எந்நிலையில் போய் சேரும் என்பதை அறிந்தே வெளிப்படையாக தமது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் இவ்விவகாரத்தின் மூலம் அடிப்படை உரிமையான ஒருவரின் கருத்துரிமை பாதிக்கப்படுவதை அறிய முடிகிறது. மாற்றங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தயங்கும் மக்களின் மன உணர்வினை பிரதிபலிக்கும் ஒன்றாகவே உள்ளது.

அ.தேன்மொழி, ரா. பத்மலதா. படங்கள் மா. மாரியப்பன், பா. சேதுராமன், வி.வி. ஆர். சுப்பிரமணியன். ­­­­­­­­­­­­­­­­­­­

This page is powered by Blogger. Isn't yours?