Tuesday, November 01, 2005

 

கருவாடு அரவை ஆலையால் ஊரே மணக்கிறது


திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஒன்றியம் சார்ந்த சமூகரெங்கபுரம் முத்து பிஷரிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற "உலர் கருவாடுதூள் அரவை ஆலை இயங்கி வருகின்றது. இந்த ஆலை ஏற்படுத்தி வரும் மாசுபாடால் இதனைச் சுற்றியுள்ள கும்பிகுளம், ராதாபுரம், தெற்குகள்ளிகுளம் சேர்ந்த கிராமத்து மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இந்த ஆலை 2002லிருந்து இயங்கி வருகிறது. இங்கே அரைக்கப்படும் ஈரமான மீன்களால் ஏற்படும் துர்நாற்றம். இதன் அருகிலுள்ள சீலாத்திகுளம் ஊர் முழுவதும் வீசுகிறது.


இதைப்பற்றி அந்த ஊரைச் சார்ந்த கருப்பசாமி நாடார் கூறியதாவது, ""மீன் அரவை ஆலையினால் ஏற்படும் கழிவுநீர் மழைநாட்களில் இங்கே இருக்கும் தாய்க்குளத்துடன் சேர்வதால் இந்த தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது. ஆடு, மாடு கூட இந்த நீரை குடிக்க முடியவில்லை''.சீலாத்திகுளம் பஞ்சாயத்து தலைவர் வேணுகோபால் கூறுகையில், இந்த ஆலையினால் இங்கே வரும் ஈக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கும்பிகுளம் கிராமத்து மக்களுக்கு தலைவலி, ஒவ்வாமை, பேதி ஏற்படுவதாக கூறுகிறார்.அதே ஊரைச் சேர்ந்த எல்.ஐ.சி.யின் ஏஜென்ட் கூறுகையில் இந்த நாற்றத்தினால் எனக்கு தலைவலி நீண்ட நாட்களாக உள்ளது. தற்போது பேதியும் கண்டுள்ளது, ஊரை காலி செய்துவிடலாம் என்று கூட தோன்றுகிறது என்றார். இராதாபுரத்தை சேர்ந்த முருகேசன் கூறுகையில், தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் சட்டதிட்டத்தின் கீழ், ஆலைகள் நகரத்தை அல்லது குடியிருப்பு பகுதியை விட்டு 6 கி.மீ காக்ககை பறக்கும் தொலைவில் கட்டப்பட வேண்டும் என்று காற்று மாசுபடுதல் தடை சட்டத்தின் (1981) கீழ் உள்ளது. இவர்கள் கட்டிய ஆலையின் துõரம் அதைச் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து சாலை போகும் மார்க்கமாக போனால் மட்டுமே 6 கி.மீதுõரம் வருகிறது. ஆனால் காக்கை பறக்கும் துõர கணக்கில் அளவிட்டால் 1 .5 கி.மீ. துõரம்தான் இருக்கிறது சீலாத்திகுளம் கிராமம். இதனால் இந்த நிறுவனத்தின் மாசு சீலாத்திகுளம் கிராமத்தை நேரடியாக தாக்குகிறது.முதல்வரின் தனிப்பிரிவு மனுவின்படி 28.11.2003 அன்று சுகாதாரதுறையின் இயக்குனர் என். ஐயனார் என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முகமூடி, விசேட காலணிகள் கையுறை கொடுக்க வேண்டும். மீன் காயப்போடுவதற்காக பயன்படுத்தி வரும் 250 து 50 அடி கொண்ட கான்கரீட் பிளாட்பாரத்தை தகர்த்துவிட்டு, அங்கே 200 மரங்களை நட வேண்டும். துர்நாற்றத்தால் மக்களின் ஆரோக்கியம் கெடுவதாலும் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாலும் உடனடியாக உலர்மீனைப் பொடியாக்குவதை நிறுத்த வேண்டும்''. என்று ஆணை பிறப்பித்துள்ளார்.தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2002ல் இவர்களுக்கு அளித்த அனுமதியின் கீழ் சில நிபந்தனைகள் விதித்துள்ளது அதில் முதன்மையானது.""மீன்பிடி நடக்கும் இடத்திலிருந்து இந்த ஆலைக்கு கொண்டு வரக்கூடாது'' என்பது ஆகும்.மாசு கட்டுபாட்டு வாரியம் 11.12.03அன்று அந்த ஆலையில் நடத்திய ஆய்வில் இங்கே உருவாகும் கழிவு நீரை எந்தவொரு சுத்திகரிப்பும் இல்லாமல் வெளியேற்றப்படுவதும். நாற்றமும், ஈயினால் ஏற்படும் அசௌகரியங்களும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையெனில் உரிமம் ரத்து செய்யப்படவேண்டும் என தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியம் தெரிவித்துள்ளது.செப்டம்பர் 2004ல் சுகாதார பணி இயக்குனர் கருவாடு தொழிற்சாலை இயங்க தடை விதித்திருந்தார். அந்த தடையின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் கருவாடு தொழிற்சாலை இயக்குனர் இடைக்காலத்தடை வாங்கியுள்ளார். இடைக்காலத்தடையின் பேரில் அந்த தொழிற்சாலை இன்றளவும் இயங்கிவருகிறது. இதுதொடர்பாக இந்நிறுவனத்தின் கருத்தறிய முற்பட்ட போது, முறையான பதில் ஏதும் கிடைக்கவில்லை.


கட்டுரை, படங்கள்:பா.வினோத்

Comments:
Congratulations for the Departmental blog! This is the first one I came to know from a TN univ.
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?